நாகர்கோவில், பிப். 9 –
திங்கள்சந்தை பகுதியை சேர்ந்தவர் ஜெலஸ்கின். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஸ்கர் (23). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அஸ்கர் விடுமுறை எடுத்துக்கொண்டு மதுரையில் இருந்து ரயிலில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய போது அவர் வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப்பை காணவில்லை. லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அஸ்கர் நாகர்கோவில் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை போலீசார ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் அஸ்கர் லேப்டாப்பை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜாவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



