தருமபுரி, மார்ச் 18 –
தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனைகள் தருமபுரி, கிருஷ்ணகிரியை உள்ளடக்கி சுமார் 10க்கும் மேற்பட்ட பணிமனைகள் உள்ளது. மேலும் பேருந்து நிலையங்களில் நேரம் காப்பாளர் அறைகள் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவை சேர்ந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் பணிக்கு செல்லாமல் பணிமனைகளிலும் நேரம் காப்பாளர் அறைகளிலும் திமுகவினர் அமர்ந்து உள்ளதாக அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணம் காட்டி ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள புகார் பெட்டியில் மனுவை போட்டு சென்றனர்.



