தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 18 –
பாரத தேசத்தின் 79-வது சுதந்திர தின விழா தென்தாமரை குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் கால்வின் தலைமை வகித்து தலைமை உரையாற்றி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை அனு ஜெ. பிரீதா முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரிய செயலாளர் சாந்தி மார்கிரெட் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, பாடல் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் சுதந்திர தினம் குறித்து பேசினார்கள். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிறைவில் பள்ளி ஆசிரியை ஜாண்சி ரீடா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



