செந்துறை, மே.12-
செந்துறையில் நேற்று திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் நேற்று முன்தினம் வெள்ளி கிழமை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திரௌபதி அம்மன் கோவில் திருவிழா 18 நாட்கள் கடந்து நேற்று முன்தினம் தீமிதிக்கு நிகழ்வு 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து அம்மன் அருள் பெறும் நிகழ்வு நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
பொதுமக்கள் பக்தகோடிகள் என அனைவரும் கலந்து கொண்டு திரௌபதி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.