திருவெண்ணெய்நல்லூர், அக். 01 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே 3-ந் தேதி நடைபெற இருந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் 8-ந் தேதி நடைபெறும் என பி.டி.ஓ., பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட டி.எடையார், சின்னசெவலை, சிறுமதுரை, மழவராயனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு வருகின்ற 3-ந் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற இருந்தது. இந்நிலையில் 3-ந் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருந்ததால், அந்த தினத்தில் நடைபெற இருந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமை வருகின்ற 8-ந் தேதி திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மரகதம் கந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும். எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்



