திருவெண்ணெய்நல்லூர். ஆக.25-
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளதால்
பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்து பயன்பெற பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்திப் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 8 முதல் 15 வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வரும் 2-ந் தேதி மங்களாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்து பயன்பெற வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார்.



