திருப்பூர், ஆக. 23 –
திருப்பூர் மாநகராட்சி 41-வது வார்டில் தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று அவர்களது கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுத்தனர் இதில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் பொதுமக்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 41, 53, 54 ஆகிய வார்டுகளுக்கு நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியினை திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் துவக்கி வைத்தனர்.
இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க. செல்வராஜ் எம்எல்ஏ, தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.மூ. நாகராஜ், பகுதி செயலாளர் முருகசாமி, மாநகராட்சி உதவி ஆணையாளர் வினோத் மற்றும் திமுக மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, வார்டு, கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



