திருப்பூர், அக்டோபர் 02 –
திருப்பூர் பிரம்மா குமாரிகள் இயக்கம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணி இந்தியா முழுவதும் 15 மாநிலங்கள் கடந்து தற்பொழுது தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இந்த பேரணியானது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் நடைபெற்றது. இதன் துவக்க விழாவினை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியின் நோக்கம் தமிழ்நாடு மாற்று திறனாளிக்கான சமத்துவம் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளித்தல் என்ற நோக்கத்தோடு இந்த பேரணி செயல்படுவதாக பிரம்மா குமாரிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.
இதில் பொறுப்பு சகோதரி பி.கு. ரேணுகா மற்றும் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சகோதர சகோதரிகள் திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், கவுன்சிலர் அனுசியாதேவி சண்முக சுந்தரம், நெசவாளர் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



