அம்மாபாளையம், ஆகஸ்ட் 11 –
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தனியார் அரங்கத்தில் திருப்பூர் நாராயண குரு சமாஜம் சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
நாராயண குரு அவர்கள் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்திய ஒரு பெரிய ஆன்மீக தலைவர். அவர் ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள் என்ற தத்துவத்தை வலியுறுத்தியவர். இறைவனின் பார்வையில் அனைத்து மக்களும் சமம் என்கின்ற ஒரு அற்புதமான போதனையை உலகிற்கு தந்தவர் என்றும் சமத்துவத்திற்கும் எல்லா மக்களையும் இணைத்துச் செல்லும் சமூக நீதிக்கும் வித்திட்ட மகான் என்று கூறுபவர் என்றால் மிகையாகாது.
மேலும் நாராயண குரு அவர்களுக்கு ஒரு ஆராய்ச்சி மையம் வைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். அதனை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிச்சயமாக அதற்கு ஒரு முயற்சி முன்னெடுப்போம் என்று உறுதியே நாங்கள் கூறியுள்ளோம் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்கப் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



