திருச்சி, மே 25 –
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தன் கட்சியினரை கோயில்களில் உள்ள பிரசாத கடைகளில் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார். காலாவதி தேதி சரிபார்க்க வேண்டும் என்றும், நேரடியாக கடைக்குள் செல்லாமல் அனுமதி பெற்று விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், கோவில் அதிகாரிகளிடம் படம் பிடித்து அனுப்ப சொல்லலாம் என்றும் தெரிவித்தார்.



