மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்குழி அடுத்த மேளவலம் பேட்டை சந்திப்பில் கருங்குழி பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் வெள்ளரிக்காய் பாதாம் பால் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்வில் கருங்குழி பேரூராட்சி தலைவர் தசரதன் துணைத் தலைவர் சங்கீதா சங்கர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் துர்கா தேவி சுந்தரமூர்த்தி மற்றும் கருங்குழி பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் கருங்குழி பேரூராட்சி உறுப்பினர்கள் உமா, விஜயலட்சுமி, தினேஷ், குணசுந்தரி, ரேவதி, ராஜாராம், கோமதி ,மேகலா, ரமேஷ், கண்ணன் மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்



