திண்டுக்கல், செப். 13 –
விடுதலைப் போராட்ட மாவீரர் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்களின் 224-ம் ஆண்டு நினைவு நாள் விழா மற்றும் முப்பெரும் விழா தமிழ்நாடு நாயுடு – நாயக்கர் உறவின்முறை (பாதுகாப்பு இயக்கம்) சார்பாக திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரை (விருப்பாச்சி கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்ட இடத்தில்) விடுதலைப் போராட்ட மாவீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்களின் திருவுருவப்படம் வைத்து வீரவணக்கம் 2020-ம் ஆண்டு முதல் 6-ம் வருடமாக தொடர்ந்து விழாவை நடத்தி சிறப்பு செய்து வருகிறார்கள்.
இவ்விழாவில் முதல் ஆளாக வருகை புரிந்து தலைமை தாங்கி சிறப்பித்த திண்டுக்கல் மண்ணின் மைந்தன், கொடைவள்ளல் ஜி. சுந்தர்ராஜன் நாயுடு (புரவலர், திண்டுக்கல் நாயுடு மகாஜன சங்கம்) அவர்கள், ஜி சுந்தரராஜன் அவர்களை சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மாநில கௌரவ தலைவர்கள் முன்னிலைகோட்டை பாண்டியன், கண்ணன் நைனா அவர்கள், இவரைத் தொடர்ந்து திண்டுக்கல் நாயுடு மகாஜன சங்கம் மற்றும் இராணி மங்கம்மாள் அறக்கட்டளை மகளிர் அணி நிர்வாகிகளும், எழுச்சி உரையாற்றிய சென்னை நாயுடுகள் சங்கம் பொன்னேரி சரத் நாயுடு அவர்களுக்கும், நாயுடு – நாயக்கர் இளைஞர் அமைப்பின் நிறுவனத் தலைவர் மதுரை திருமங்கலம் PM பாரத் நாயுடு அவர்களுக்கும், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு கவர நாயுடு மகாஜன சங்கம் மாநில தலைவருமான மதுரை போஸ் நாயுடு அவர்களுக்கும், தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனர் வழக்கறிஞர் தஞ்சை செந்தில்குமார் நாயுடு அவர்களுக்கும், அனைத்து நாயுடு- நாயக்கர் பேரவை நிறுவனத் தலைவர் பழனி பத்மநாபன் நாயுடு அவர்களுக்கும், பொதுச் செயலாளர் மதுரை செல்லபாண்டியன் அவர்களுக்கும், விஜயநகர நாயக்கர் வரலாற்று மீட்பு அசோசியேசன் நிறுவனத் தலைவர் மதுரை சென்ராஜூ நாயுடு அவர்களுக்கும், மாமன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் மதுரை பீரோ செந்தில் குமார், முருகேச பாண்டி அவர்களுக்கும், தமிழக நாயுடு கூட்டமைப்பு (அறக்கட்டளை) மாநிலத் தலைவர் முத்துராஜ் நாயுடு அவர்களின் ஆணைக்கிணங்க கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த மாநில தலைமை நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும், தமிழக நாயுடு பேரவை (ஜனநாயக மக்கள் ராஜ்ய கட்சி) மாநிலத் தலைவர் சேலம் வழக்கறிஞர் குணசேகரன் அவர்கள் ஆணைக்கிணங்க கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும், RMR பாசறையின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், மாமன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயற்குழு உறுப்பினருமான மதுரை பிரபு நாயுடு ஆணைக்கிணங்க கலந்து கொண்ட ஜெகநாதன் நைனா, ராம்குமார் மற்றும் அழகர் அவர்களுக்கும், தமிழக நாயுடு கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் மதுரை ராஜன் பாபு அவர்களுக்கும், திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது தேனி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள், சமுதாய உறவுகள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவர்களைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், இந்து இயக்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், சந்தானம் ரசிகர் மன்ற நிர்வாகிகள், SFRBC (பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) திண்டுக்கல் மாவட்ட தலைமை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். மேலும் திண்டுக்கல் கி. மீனாட்சிநாயக்கன்
பட்டி, முன்னிலைகோட்டை, K. சிங்காரகோட்டை, லட்சும நாயக்கன்பட்டி, சீலப்பாடி செல்லம்மந்தாடி, திண்டுக்கல் RM காலனி பகுதியில் உள்ள மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பு செய்தார்கள். விழாவில் கலந்து கொண்ட மகளிர் அணி அனைவருக்கும் மாநில மகளிரணி தலைவி RS செல்வி அவர்கள் நன்றி தெரிவித்தார். இறுதியில் இயக்கத்தின் மாநில நிர்வாகி கோல்டு ஸ்டார் வேணுகோபால் அவர்கள் அன்னதானம் வழங்கினார்.
இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாயுடு- நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக விடுதலைப் போராட்ட மாவீரர் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்களின் திருவுருவப்படம் நினைவு பரிசு மாநில தலைமை சார்பாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் 2000- கும் மேற்பட்ட மக்கள் திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் (கோபால் நாயக்கர் தூக்கிடப்பட்ட இடத்தில்) விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு வீரவணக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் மாநில மற்றும் மத்திய அரசு எங்கள் நீண்ட கால கோரிக்கையான ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட விடுதலைப் போராட்ட மாவீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் கோபால் நாயக்கருக்கு சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அல்லது அவரின் வரலாற்றை உலகறிய செய்யும் வகையில் கல்வெட்டு அமைத்து தர ஒட்டுமொத்த அனைத்து தரப்பு மக்கள் சார்பாக தமிழ்நாடு நாயுடு – நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் இவ்விழாவை சீரும் சிறப்புமாக நடத்த காரணமாக அமைந்த மாநில, மாவட்ட, நகர, கிளை மற்றும் மகளிர் அணி அனைத்து நிர்வாகிகளுக்கும் மேலும் இளைஞர் அணி தலைமை நிர்வாகிகள் ஜனார்த்தனன், இளங்கோ, பாலாஜி, பாலா, பாலகுரு, செட்டிநாயக்கன்பட்டி பாலா, அருண், முருக பாண்டி, முருக ராஜா, அமரன் கார்த்திக் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும், சொந்தங்களுக்கும் நிறுவனர் திண்டுக்கல் சபாஷ் நாயுடு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.



