அரியலூர், செப்;29
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வஞ்சினபுரம் கிராமத்திலுள்ள ஏரியில் 100 நாள் வேலை நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது, கதண்டு கொட்டியதில் 19 பேர் மூச்சு திணறல், மயக்கம்.
வஞ்சினபுரம் பெரிய ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை நேற்று மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் நூறு நாள் திட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, முள் புதர்களில் இருந்த கதண்டு, அங்கிருந்தவர்களை கொட்டியது. இது குறித்து தகவலறிந்த ஊராட்சி செயலர் மற்றும் தலைவர், தாசில்தார்,காவல்துறை,
தீயணைப்பு துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடல்நிலை பாதிப்படைந்த 19 பேரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்



