தருமபுரி, ஜுலை 16 –
தருமபுரி நகர பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆகியோர் தொடங்கிவைத்தார்கள். இந்த முகாம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் நடைபெறுகிறது. நகரப் பகுதியில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள் ஊரகப்பகுதியில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் பொது மக்களுக்கு அரசு மூலம் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, நகர செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற தலைவர்
லட்சுமி நாட்டான் மாது, நகர மன்ற துணைத் தலைவர் நித்தியா அன்பழகன்,
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் கௌதம், துணை அமைப்பாளர் உதய சூரியன், துணைச் செயலாளர் முல்லைவேந்தன், வெல்டிங் ராஜா, வார்டு கவுன்சிலர் மாதேஸ்வரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



