தருமபுரி, அக்டோபர் 7 –
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் தருமபுரி மாவட்டம் உதயமாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்ற தருமபுரி தினத்தில் மை தருமபுரி சமூக அமைப்பின் சார்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை தருமபுரி புத்தகத் திருவிழா நிகழ்வில் ஏற்படுத்தினர். நெகிழிகளை பயன்படுத்தாமல் தவிர்த்து மஞ்சப்பை துணிகளை மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மஞ்சப்பை விழிப்புணர்வை தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி அவர்கள் தொடங்கி வைத்தார். முதல் மஞ்சப்பையை மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் தகடூர் புத்தகப் பேரவை தலைவர் சிசுபாலன், ஆசிரியர் தங்கமணி, தலைமையாசிரியர் கூத்தப்பாடி பழனி, மருதம் நெல்லி கல்வி குழுமம் தலைவர் கோவிந்த் ஆகியோர் மஞ்சப்பை விழிப்புணர்வை ஏற்படுத்தி தந்தனர். இந்த நிகழ்விற்கு எங்களை ஊக்குவித்த தங்கம் மருத்துவமனை மருத்துவர் செந்தில் அய்யா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், சண்முகம், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தானர்.



