தருமபுரி, செப்டம்பர் 25 –
தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ. மணி MP தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் MGS வெங்கடேஸ்வரன் வரவேற்றார்.
இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், ராஜகோபால், கார்த்திக், முத்தமிழன், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி, தருமபுரி தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமித்தல், 2026 தேர்தல் பணி தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் உமாசங்கர், ஆறுமுகம், நகர செயலாளர் நாட்டான் மாது, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஏ.எஸ். சண்முகம், வைகுந்தம், மல்லமுத்து, டி.எல். காவேரி, ஏரியூர் செல்வராஜ், மடம் முருகேசன், கருணாநிதி, வீரமணி, பச்சையப்பன், கிருஷ்ணன், சக்திவேல், பேரூர் கழக செயலாளர் வீரமணி, சண்முகம் மற்றும் தேர்தல் பணி குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் செல்வராஜ் நன்றியுரையாற்றினார்.



