தருமபுரி, ஆகஸ்ட் 05 –
தருமபுரி அடுத்த அன்னசாகரம் ஏரிக்கரை சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் சீமை கருவேலம் அதிகமாக இருந்ததால், தண்ணீர் நீண்ட நாட்கள் தேங்குவதில்லை. இந்நிலையில் ஏரியில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுத்து, கரையை பலப்படுத்தும் வகையில், அன்னசாகரம் இளைஞர்கள் ஒன்றிணைந்து, அன்பே சிவம் நற்பணி குழுவை உருவாக்கினர். தொடர்ந்து குழு சார்பில் ஏரிக்கரையை சுத்தப்படுத்தி பனை மரத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து அன்பே சிவம் நற்பணி குழுவினர் ஒன்றிணைந்து, அன்னசாகரம் ஏரிக்கரையில் சுமார் 100 – க்கும் மேற்பட்ட பனை மரக்கன்று மற்றும் பனை விதைகளை நடவு செய்தனர். முதலவதாக குழந்தைகளுக்கு. மரம் வைப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் முதல் மரகன்றினை வைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி வட்டாட்சியர் சுகுமார் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக,திமுக தவெக நிர்வாகிகள் ஆகியோர் பனை மரத் கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் ஆர்வமுடன் பங்கேற்று ஏரிக்கரையில் பனை மரக் கன்றுகள் மற்றும் பனை விதைகளை நடவு செய்தனர். மேலும் இந்த பனை விதைகளை அழிய விடாமல், தினமும் பராமிரிப்போம். இதேப் போல் எல்லா கிரமத்திலும் ஏரிக்கரையில் பனை விதைகளை நடவு செய்து மண் அரிப்பை தடுத்து, கரையை பலப்படுத்தி, நிலத்தடிநீரை பாதுகாக்க வேண்டும் என இளைஞர் தெரிவித்தனர்.



