தருமபுரி, ஏப்ரல் 18 –
தருமபுரி மாவட்ட பிஜேபி சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கே. பி. அன்பழகன் (பாலக்கோடு), சம்பத்குமார் (அரூர் தனி), மரகதம் வெற்றிவேல் (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோருக்கு இரண்டை இலை சின்னத்திலும், பாமக வேட்பாளர்கள் சௌமியா அன்புமணி (தருமபுரி), பாடி செல்வம் (பென்னாகரம்) ஆகியோருக்கு மாம்பழம் சின்னத்திலும் முன்னாள் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு அமைந்த உடன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றார்.
இதில் பிஜேபி மாவட்ட தலைவர் சரவணன், நகர தலைவர் சாய் ஆறுமுகம் , அமமுக மாவட்டச் செயலாளர் டி. கே. ராஜேந்திரன், அதிமுக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



