தருமபுரி, செப்டம்பர் 30 –
தருமபுரியில் 7- ஆம் ஆண்டு புத்தகத்திருவிழாவில் திமுக மேற்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் முனைவர் கவிதா மோகன்தாஸ் எழுதிய நூலினை முன்னாள் அமைச்சர், தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் வெளியிட கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் அன்புதீபன் மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் பெற்று கொண்டனர். விழாவில் முன்னாள் எம்.பி டாக்டர் செந்தில், வருவாய் கோட்டாசியர் காயத்ரி, வட்டாச்சியர்கள் மோகன்தாஸ், ராஜராஜன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



