தருமபுரி, செப்டம்பர் 02 –
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து தருமபுரி தொலைதொடர்பு அலுவலகம் முன்பு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது குடும்பத்தாரையும் இழிவாக பேசியதை கண்டித்து நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து தருமபுரியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ய வேண்டும். நாட்டை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் என அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



