தொண்டி, செப். 30 –
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 வது ஆண்டு துவக்க நிகழ்வை முன்னிட்டு ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் சார்பாக புதிய தமுமுக அலுவலகம் பன்னூல் ஆசிரியர் எம் ஆர் எம் அப்துல் ரஹீம் தமுமுக முன்னாள் மாநில செயலாளர் B.அப்துல் ரஹிம் ஆகியோரது நினைவாக படிப்பகம் துவக்க நிகழ்வும் மனிதம் காக்கும் பணிகள் செய்த இந்து முஸ்லிம் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு அன்பாலாய உண்டு உறைவிட பள்ளிக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கு விழா தொண்டி பேரூர் சார்பில் நடைபெற்றது.
விழாவில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் வகித்தார். கிரா அத் ஆலிம் முகம்மது காசிம் ஓதினார் தொண்டி பேரூர் தலைவர் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார். தொண்டி ஐக்கிய ஜமாத் செயலாளர் பாருக் ஹாஜியார் கௌரவத் ஆலோசகர் பரகத் அலி, வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயுப்கான், செயலாளர் விஏஓ ஃபாரூக், தொண்டி தெற்கு தெரு ஜமாத் தலைவர் நிர்வாகிகள், வடக்கு தெரு ஜமாத் நிர்வாகிகள், கிழக்கு தெரு ஜமாத் நிர்வாகிகள், ஓடாவி தெரு ஜமாத் நிர்வாகிகள், மரைக்காயர் தெரு ஜமாத் நிர்வாகிகள், லெப்பை சாகிப் தெரு ஜமாத் நிர்வாகிகள், மரைக்காயர் தெரு நிர்வாகிகள், எம்.ஆர். பட்டனம் ஜமாத் நிர்வாகிகள், பி.வி. பட்டனம் ஜமாத் நிர்வாகிகள், தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள், கிறிஸ்தவ சபை நிர்வாகிகள், தமுமுக மமக மாவட்ட பேரூர் நிர்வாகிகள், திமுக நகர் செயலாளர் இஸ்மத் நானா, காங்கிரஸ் நகர் தலைவர் காத்தார் ராஜா, விடுதலை சிறுத்தைகள் முருகன், ராதாகிருஷ்ணன் பெரிய பள்ளி வாசல் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அலுவலகம் மற்றும் பன்னூல் ஆசிரியர் எஸ்ஆர்எம் அப்துல் ரஹீம் மற்றும தமுமுக B அப்துர் ரஹீம் நினைவு படிப்பகத்தை மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப் தாம்பரம் மாமன்ற உறுப்பினர் மற்றும் தமுமுக மாநில தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் தொண்டி ஐக்கிய ஜமாத்தின் கௌரவ தலைவர் பொறியாளர் அபூபக்கர் இந்து தர்ம பரிபாலன சபை கௌரவத் தலைவர் பாலசுப்பிரமணியன் ராஜா கிறிஸ்துவ பங்குத்தந்தை தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம் மாவட்ட பொருளாளர் பனைக்குளம் அசன், தொண்டி பேரூர் கவுன்சிலர் பெரியசாமி, சமீமா பானு, செரிபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மனித நேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம் யாகூப் தமுமுக மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா தமுமுக தலைமை பிரதி நிதி மண்டலம் ஜைனுல் ஆபிதின் கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தும் தொண்டி அன்பாலயா சிறுவர் உண்டு உறைவிட பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் உணவுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டு சேவைகள் பற்றி பேசினர்.
விழாவில் தமுமுகவின் தொண்டி பேரூர் தமுமுக மூத்த உறுப்பினர்களான முகமது ரபீக், முகமது நிஷார், அப்துல் ரஹீம், அப்துல் ரசாக், கலீல் ரகுமான், அஜிஸ் ரகுமான், பந்தே நவாஸ் ஆகியோருக்கு தன்னலமற்ற தொண்டர் விருதும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் தொண்டியில் ஊரின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கும் தொண்டி ஐக்கிய ஜமாத், இந்து தர்ம பரிபாலன சபை, கிறிஸ்தவ சபை நிர்வாகிகளுக்கு மனித ஒற்றுமை விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை முகமது மைதீன், பேரூர் துணைத் தலைவர் அலாவுதீன்மமக பேரூர் செயலாளர் பரகத் அலி, பேரூர் பொருளாளர் அம்மாது சேகு மற்றும் தொண்டி பேரூர் பகுதி நிர்வாகிகள் ஜலால் அப்துல்லாஹ், சலீம் ரியாஸ், கல்யாணம், ராஜா ராம் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர். பேரூர் பரக்கத் அலி நன்றி கூறினார்.



