மதுரை, செப். 06 –
இந்தியாவின் முன்னணி ஆற்றல் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்க்கு (இந்தியன் ஆயில்) தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது வருடாந்திர கூட்டத்தில் தமிழ்நாட்டில் சாலை கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை போற்றும் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு சென்னையில் கடந்த மாதம் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக கண்காட்சியான கொனெக்ஸ் சவுத் உடன் இணைந்து நடைபெற்றது.
இந்த கௌரவம் மிக்க அங்கீகாரத்தை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் ஏ.வ. வேலு, தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெடுஞ்சாலைத் துறையின் மூத்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முக்கிய தொழில்துறை பங்குதாரர்கள் முன்னிலையில் வழங்கினர். இந்த விருதை இந்தியன் ஆயில் சார்பாக இந்தியன் ஆயிலின் நிர்வாக இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவர் M. அண்ணாதுரை மற்றும் தலைமைப் பொது மேலாளர் விவேக் கோயல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



