கிருஷ்ணகிரி, ஜூலை 17 –
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள அனைத்து நிலை பணியாளர்களும் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் கோரிக்கை மாநாடு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில தலைவரும் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அ. ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
கிராம ஊராட்சிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு அன்றாட சுத்தமான குடிநீர் வழங்கும் பணியாளர்களுக்கும், சுற்றுப்புற தூய்மையை வைத்துக் கொள்ளும் பணியாளர்களுக்கும் ஊரகவளர்ச்சி துறையில் இரவு பகல் பாரமல் அரசு அறிவிக்கின்ற அனைத்து திட்டங்களும் அனைத்து கிராமங்கள் மற்றும் பட்டி தொட்டியெல்லாம் சேர்க்கும் அனைத்து நிலை பணியாளர்களின் கோரிக்கை முன் வைத்து 16 அம்ச கோரிக்கை மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் அனைவரும் அலை கடலென கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன். இவன் தி. செங்கதிர்செல்வன் மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், மாநில அமைப்பு செயலாளர் TNPSA. கிருஷ்ணகிரி மாவட்டம்.