கோவை, செப். 08 –
கோவை மாவட்டம் ஹோப் காலேஜ் மணி மஹால் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம் நான்காவது ஆண்டு பொதுக்குழு மற்றும் கோவை மாவட்ட இளம் மழலையர் பள்ளிகளின் உரிமையாளர் சங்கம் 9-ம் ஆண்டு பொதுக்குழு தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்றது. 18 மாவட்டங்களில் இருந்தும் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் முன்பருவ கல்வி தொடர்பாக கல்வி கொள்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. சுமார் பத்து லட்சம் குழந்தைகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் நிலையில் சுமார் 4 லட்சத்திற்கும் குறைவான குழந்தைகளே முன்பருவ கல்வியை பெறுகின்றனர்.
ஒன்றாம் வகுப்பில் குழந்தையை சேர்க்கும் வயது 5 என நிர்ணயித்திருப்பது அறிவியலுக்கு எதிரானது. முன்பருவக் கல்வி பெரும்பாலும் தனியார் பள்ளிகளே கற்றுக் கொடுக்கிறது. அரசானது அடுத்தடுத்து கடுமையான சட்டங்களை அறிவித்து பள்ளிகளை மூட முற்படுகிறது.
முன்பருவக் கல்வி முறை, பெண்கள் உரிமை, பள்ளிகளால் பெண்கள் வேலைக்கு போகும் நிலை அதிகரித்துள்ளது இதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தத் துறையில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதை மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயமாக பார்க்கிறோம்.
கல்வித்துறை அதிகாரிகளிடையே லஞ்சம் புழங்குவது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த கூட்டத்தில் கோவை இளம் மழலையர் பள்ளிகளின் உரிமையாளர் சங்க தலைவர் K. கௌதமன், செயலாளர் G. ஜெரோம், பொருளாளர் K. முகேஷ் மற்றும் குமுதா காந்தி, கீதாஞ்சலி, லதா, ராமதாஸ், ஜெயகுமார், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



