By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்ட போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி; எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்ட போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி; எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை
கனஂனியாகுமரி

தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்ட போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி; எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை

Last updated: July 11, 2025 6:00 pm
July 11, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 11 –

தமிழகத்தில் போலீசாருக்கு முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு காவல் நிலையங்களில் வார விடுமுறை சரியாக வழங்கப்படவில்லை என்று பல்வேறு புகார்கள் வந்தன. குமரி மாவட்டத்திலும் காவல் நிலையங்களில் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை அமல்படுத்தும் வகையில் தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டத்தில் போலீசாரின் வார விடுமுறையை கண்காணிக்கும் வகையில் தனி செயலி தொடங்கப்பட்டு இருக்கிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. எஸ்.பி. ஸ்டாலின் இந்த ஆப் இயக்கத்தை தொடக்கி வைத்தார். இனி போலீசார் இந்த ஆப் மூலமாக விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். யார், யார் எப்போது வார விடுமுறை எடுக்கிறார்கள், அவர்களுக்கு முறையாக வார விடுமுறை அனுமதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதையும் நேரடியாக எஸ்.பி. கண்காணிக்க முடியும். இதை தொடங்கி வைத்து பேசிய எஸ்.பி. ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தனித்தனி கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த காவல் நிலையங்களில் பணியாற்றக் கூடியவர்கள் இந்த க்யூ ஆர் கோடு மூலம் இந்த ஆப்பை பயன்படுத்தி வார விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதை அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அப்ரூவல் செய்ய வேண்டும். இன்ஸ்பெக்டர் அந்த வார விடுமுறையை நிராகரித்து இருந்தால் டி.எஸ்.பி.க்கள் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். அவர்களும் அந்த வார விடுமுறையை நிராகரித்து இருந்தால் எஸ்.பி. ஆராய்ந்து அனுமதி அளிக்க வேண்டும்.

ஒருவேளை தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவை இருந்தால் இந்த வார விடுமுறை நிராகரிக்கப்பட்டு வேறொரு நாளில் வழங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு காவலர்களும் எவ்வாறு வார விடுமுறை எடுக்கிறார்கள், அவர்களுக்கு முறையாக வார விடுமுறை வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும்.

இதே போல் தற்போது போலீசாருக்கான ஏ. ஐ. ஹேண்ட் புக் என்ற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ஆப் பயன்படுத்தி போலீசார் தங்களுக்கு நிர்வாக ரீதியாக உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், ஏ.எஸ்.பி. லலித்குமார் மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பரிசு வழங்கினார்
குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி
பலத்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அருமனை அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

October 24, 2024
57 Views
வன்னியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தே.மு.தி.க. சமூக வலைதள அணி பொறுப்பாளராக வழக்கறிஞர் சிவக்குமார்
திருவாரூர் – மயிலாடுதுறை இடையில் சாலை மறியல்
வி .எஸ் .ஆர் .ஏ நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account