திருப்பத்தூர், ஜூலை 29 –
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டெல்லி மற்றும் ஷாகிராபாத் பகுதிகளில், தனியார் திருமண மண்டபம் மற்றும் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை தனிப்படை காவல்துறையினர் அதிரடி சோதனையில் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில் நடைபெற்ற சோதனையின்போது உரிமையாளர் தப்பியோடிய நிலையில், வருவாய்த் துறையினர் முன்னிலையில் மண்டபத்தின் பூட்டை உடைத்து சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, திருமண மண்டபத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன் ரூ25,000 அபராதமும் விதிக்கப்பட்டு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை .



