பூதப்பாண்டி, அக்டோபர் 04 –
கீரிப்பாறையை அடுத்துள்ள வாழையத்து வயல் பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் தனக்கு வீட்டு வேலை செய்ய வேண்டி ஒரு டெம்போவில் சிமெண்ட் செங்கல்கள் கொண்டு சென்றார். தடிக்காரன் கோணம் சந்திப்பில் உள்ள சோதனை சாவடியில் அந்த டெம்போவை விட முடியாது என பிடித்து வைத்தனர். இதனால் இருவருக்குள்ளேயும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த நபர் பொதுமக்கள் உதவியுடன் திடீர் என தடிக்காரன்கோணம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது இந்த தகவலறிந்து தோவாளை தாசில்தார் கோலப்பன், அழகியபாண்டியபுரம் வனச்சரக அலுவலர் கலையரசன் ஆகியோர் சம்பவ இடம் வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அந்த செங்கல் ஏற்றி வந்த டெம்போவை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பானது.



