தஞ்சாவூர், அக்டோபர் 6 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார். குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை விரைவாக கொள்முதல் செய்திடவும் கொள் முதல் செய்யப்பட்ட நெல்லை விரைவாக இயக்கம் செய்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கணபதி அக்ரஹாரம் மற்றும் தென்னமநாடு கொள்முதல் நிலையங்களில் நேரடியாக பார்வையிட்டுள்ளார்.
மேலும் திறந்த வெளி சேமிப்பு மையங்களில் நெல் இருப்பு வைத்திட பரித்தியப்பர் கோவில் மற்றும் சோழன் மாளிகை கிராமங்களில் உள்ள இடங்களை யும் ஆய்வு செய்தார். மேலும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் சேமிப்பு கிடங்களையும் ஆய்வு செய்தார். அந்த இடங்களில் தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து கொள்முதல் செய்யப்படும்.
நெல்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் தமிழ்நாடு நுகர்வுகள் வாணிபக் கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.



