தஞ்சாவூர், செப்டம்பர் 15 –
தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி நிறுவிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் முன்னேற்றத்தில் இந்தியா என்ற தலைப்பில் தஞ்சாவூர் அண்ணா நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழும், நினைவுபரிசாக புத்தக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியரும் மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட செயலாளருமான முனைவர் ச. முருகானந்தம், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகருமான கோ. ஜெயக்குமார், மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் இணை செயலாளர் ஜோசப் அமல்ராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியை ப. சித்திரமுகி, ஆசிரியர்கள் முனைவர் வீ. தென்றல் மற்றும் முனைவர் து. பிரகாஷ் ஆகியோர்கள் பங்கேற்றனர்.



