தஞ்சாவூர், அக். 30 –
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வி துறையால் வருடத்திற்கு ஒருமுறை நடத்தபடும் 66 வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தார். இதில் 5300 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு
இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்,, மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன்,பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராம
நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் , தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி,கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) இ.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உத்தரவின்படி, 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வி துறையால் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் 66 வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் நடைபெற்று கொண்டுள்ளது. இப்போட்டியில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாட் டிலுள்ள 38 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர் மாணவியர்கள் குறுவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களும் பங்கு கொள்கிறார்கள்.
இன்று முதல் 31.10.2025 வரை நடைபெறும் போட்டிகளில் 2700 மாணவியர்களும், 01.11.2025 முதல் 03.11.2025 வரை நடைபெறும் போட்டிகளில் 2600 மாணவர்களும் மொத்தம் 5300 பேர் கலந்து கொள்கிறார்கள். 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆகிய மூன்று பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் (தனிநபர் போட்டிகள்) வெற்றி பெறும் மாணவ, மாணவியர் தமிழக அணி சார்பில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் (SGFI) நடத்தும் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்குபெற தகுதி பெறுவார்கள். குறுவட்ட முதல் மாநில அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு தமிழக அரசு ரூபாய் 12.50 கோடி தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முறையே ரூபாய் 2 லட்சம். 15 லட்சம். 1 லட்சம் பரிசு தொகையினை அரசு வருடா வருடம் வழங்கி வருகின்றது. இப்போட்டிகளில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
முன்னதாக தடகளப் போட்டி துவக்க விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தேசிய கொடி ஏற்றியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒலிம்பிக் கொடி ஏற்றியும், மாவட்ட ஆட்சித்தலைவர் யா.பிரியங்கா பங்கஜம் பள்ளிக் கல்வித் துறை கொடி ஏற்றியும் வீரர்களின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டனர்.
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவகுமார்,மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் (ஆ) ஐ.கோபாலகிருஷ்ணன், (. பொ) கே.ஜெயலெட்சுமி, மாநில மூத்தோர் தடகள சங்க தலைவர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்க தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் சு.க.முத்துச் செல்வம் , மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட் டேனியல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெ.கற்பகம் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்



