தஞ்சாவூர், ஜுன் 30 –
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தஞ்சாவூர் மாவட்ட இரத்த மையங்கள் இணைந்து உலக குருதி கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி பேரணி மூலம் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து குருதி வழங்கி வரும் குருதி கொடையாளர்களை விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை கௌரவபடுத்தும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மருத்துவர் கோ. பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் செல்வம், மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய துணை மருத்துவ அலுவலர் முத்து மகேஷ், சுகாதாரம் இணை இயக்குநர் மருத்துவர் செல்வகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பா. கலைவாணி, இரத்தவங்கி மேலாளர் மருத்துவர் கிஷோர்குமார், இரத்தவங்கி கண்ணன் கிருஷ்ண மூர்த்தி, எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் ஜெனிபர் அருள்மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.