By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 30, 2026 6:27 pm
July 30, 2026
34 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 30 –

தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என திருவையாற்றில் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு நகரதிமுக சார்பில் அனைத்து விவசாயிகளின் விவசாய பயிர் கடன்களை ரத்து செய்யாததை கண்டித்தும் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு பயிர் கடன் வழங்காத த.வெ.க அரசை கண்டித்தும், திருவையாறு கிராம கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பு பயிர் கடனை முழுவதும் முழுமையாக ரத்து செய்வேன் என்றார். ஆட்சிக்கு வந்த பிறகு சொன்னதை செய்யவில்லை. ஒரு வீட்டுக்கு ஒருத்தருக்கு தான் கடன் தள்ளுபடி அரசாங்க வேலையில் இருந்தாலோ அல்லது வங்கி ஊழியராக இருந்தாலோ அல்லது விவசாயியாக இருந்தாலும் நிச்சயமாக அந்த கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று சொல்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது. சம்பா சாகுபடியும் இருக்காது. எனவே காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

ஏரி, குளங்கள் எல்லாம் தூர்வாரி ஆழப்படுத்துகின்ற பணிகளை விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கிறோம். தஞ்சையில் மிகப்பெரிய அளவில் நம்முடைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்கின்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சார்பாக நிச்சயமாக நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சிவசங்கரன், அரசாபகரன், கவுதமன், நகர சபை தலைவர் கஸ்தூரி நாகராஜன், துணைத்தலைவர் நாகராஜன், மேல திருப்பந்துருத்தி போரூர் செயலாளர் அகமது மைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு வேலைக்கான மாபெரும் கருத்தரங்கம்: மார்த்தாண்டத்தில் 21ம் தேதி நடக்கிறது
களியக்காவிளை அருகே இசக்கி அம்மன் கோவிலில் 36 கிலோ வெண்கல விளக்கு திருடிச் சென்றவர் கைது
பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் களப பூஜை நாளை மறுநாள் நடக்கிறது
புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

அதிமுக சார்பில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

September 8, 2025
63 Views
கல்லூரிக்கு ஆயிரம் சேர்கள் வழங்கும் விழா
ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா
துணை மின் நிலையத்திற்கு 40 ஆண்டுகளுக்குப்
பொறியியல் கொள்முதல் 12 வது கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account