ஈரோடு, செப். 9 –
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது. ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், மதியழகன், வீராகார்த்திக், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்கள் ரமாராணி, தங்கவேலு, பிரகாசம் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இளங்கோவன், ரஞ்சித்குமார், சண்முகம், தங்கராஜ், நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஆசிரியர், அரசு ஊழியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.



