சோழவந்தான், ஜூலை 09 –
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய் கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பால், தயிர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருவேடகம் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அக்னி சட்டி அலகு குத்தி ஊர்வலமாக வந்து திருக்கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தச்சம்பத்து கிராமத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.