சென்னை, செப். 24 –
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மாநகாட்சி 10வது மண்டலம் 140 வது வார்டு சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாழைத்தோப்பு பகுதியில் ரூ. 77.76 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 504 குடியிருப்புகளை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அதற்கான ஆவணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் ப. தாயகம் கவி, சைதை மேற்கு பகுதி செயலாளரும் 10-வது மண்டல குழு தலைவருமான எம். கிருஷ்ணமூர்த்தி, சைதை கிழக்கு பகுதி செயலாளரும் 13-வது மண்டல குழுத் தலைவருமான இரா. துரைராஜ் 140-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். ஸ்ரீதர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



