சென்னை, ஆகஸ்ட் 23 –
சென்னை திருவல்லிக்கேணி சுதந்திரநகர் 2-வது தெரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாதங்கேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் யாக சாலையில் இருந்து ஆண்களும், பெண்களும் கலச நீர் எடுத்துச் சென்று கும்பத்திற்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாதங்கேஸ்வரி அம்மனை அலங்காரம் செய்த பின்னர் பக்த கோடிகள் தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சார்பாக பக்த கோடிகளுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை ஆதி ஆந்திரா பொதுநலசங்க தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி (இந்து கோ ஆப்ரேட்டிவ் சொசைட்டி இயக்குனர்), பொதுச்செயலாளர் செயலாளர் யு. ஹரி, பொருளாளர் கே.எம். சீனிவாசன், துணைத் தலைவர் டி.எல்.வெங்கடைய்யா (எ) அப்துல், துணைச் செயலாளர் கே.எஸ். விஷ்ணு பிரசாத் மற்றும் சுதந்திரா நகர் ஆதி ஆந்திர பொதுநலச் சங்கம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.



