கோவை, ஆகஸ்ட் 29 –
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் திட்டப்பணிகள் துவக்க விழா கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட பொன்விழா கலையரங்க வளாகத்தில் உள்ள நுழைவாயிலில் பேவர் பிளாக் அமைத்தல் மற்றும் கழிவறை கட்டுதல், மின்விளக்கு அமைத்தல் 20 லட்சம் மதிப்பீட்டிலும், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 18 குருவம்மாள் நகர் பூங்காவிற்கு மதில் சுவர் மற்றும் நடைபாதை அமைத்தல், லட்சுமி நகர் பூங்காவிற்கு மின்விளக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் 16 லட்சம் மதிப்பீட்டிலும் மொத்தம்
36 லட்சம் மதிப்பீட்டில் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் செயல் அலுவலர் சரவணகுமார், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவிமன்னவன், துணைத் தலைவர் கணேஷ், சூலூர் நகர திமுக செயலாளர் கௌதமன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் சபரி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தார் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தனர்.



