சுசீந்திரம், நவ. 24 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வடக்கு பாகத்தில் மேற்கு நோக்கி நிற்கும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு மாதம் தோறும் அவரது பிறந்த நாளான மூல நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் முழு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனை நடத்துவது வழக்கம்.
அதுபோல நேற்று மூல நட்சத்திரம் என்பதால் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முழு உருவ வெள்ளி அங்கு சாத்தப்பட்டது. பின்பு வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்து சென்றனர். வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வருடம் தோறும் நடைபெறுவது போல ஆஞ்சநேயர் ஜெயந்தி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



