நாகர்கோவில் மே 9
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை ஆவணி மார்கழி மாசி ஆகிய நான்கு மாதங்களில் 10 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களுக்கு பின்னர் கோவில் பூசாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்து கொடியை திரு கொடியேற்றம் செய்து வைத்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று தொடங்கிய இந்த கொடியேற்ற நிகழ்ச்சி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் திருமுறைபாராயணம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தினமும் தேவார இன்னிசை சாமி வாகனத்தில் தினசரி பவனி வருதல்மற்றும் ஒன்பதாவது நாள் திருவிழா வரும் 16ஆம் தேதி தேரோட்டமும் அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண நிகழ்சி நடைபெறுகிறது. விழாவில் நிறைவு நாளான 17ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்தில் சாமி அம்மாள் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தெப்பத் திருவிழா நடைபெறும் அன்று நள்ளிரவே ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி

Leave a comment