By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரிப்பு; பெற்றோர் மீது வழக்கு பாயும் என எஸ்பி எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரிப்பு; பெற்றோர் மீது வழக்கு பாயும் என எஸ்பி எச்சரிக்கை
கனஂனியாகுமரி

சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரிப்பு; பெற்றோர் மீது வழக்கு பாயும் என எஸ்பி எச்சரிக்கை

Last updated: September 23, 2025 1:32 pm
September 23, 2025
21 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 23 –

குமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ரீல்ஸ் மோகத்தில் பைக் குகளை மிக அதிவேகத்தில் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் எஸ்.பி. ஸ்டாலின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சாலை விதிகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இளைஞர்கள் விலை உயர்ந்த பைக்குகளை கண்டபடி ஓட்டி வருகின்றனர். மேலும் அவர்களது நண்பர்கள் செல்போன்களில் படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.

இதற்கிடையே போலீசார் நடவடிக்கைக்கு கொஞ்சமும் பயம் இல்லாமல் தொடர்ந்து இளைஞர்கள் கிராமப்புற சாலைகளை மையமாகக் கொண்டு வேகமாக சென்று ரீல்ஸ் எடுத்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அது போல் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இளம் பருவம் என்பதால் சாலை விதிகளும் தெரிவதில்லை. அவர்களது உயிரின் மதிப்பும் தெரியாமல் பைக்குகளை சாலைகளில் கண்டபடி ஓட்டி வருகின்றனர். இது தொடர்பாக குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன் தினம் மட்டும் கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் 9 சிறுவர்கள் ஓட்டி வந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

வடசேரி போலீசார் ஒரு சிறுவனின் பைக்கையும், கோட்டார் போலீசார் ஒரு சிறுவனின் பைக்கையும் பறிமுதல் செய்தனர். பைக்கை பறிமுதல் செய்ததோடு சிறுவர்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் வடசேரியில் சிக்கிய சிறுவன் 13 வயதை நிரம்பியவன். சிறுவர்கள் பைக்கில் வரும்போது அசம்பாவிதங்கள் நடக்கும் போது குடும்பங்கள் சிதைந்து விடும். இதனை மனதில் வைத்து சிறுவர்கள் பைக் ஓட்டி செல்வதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்கள் கேட்கும் பைக்குகளை உடனடியாக வாங்கிக் கொடுக்கக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் இதுபோன்று சிறுவர்கள் தொடர்ந்து பைக்குகளை ஓட்டி வரும்போது அபராதம், பெற்றோர் மீது வழக்கு, என பல நடவடிக்கை பாயும் என எஸ்.பி. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நாகா்கோவில் பள்ளி பேருந்து கவிழ்து விபத்து: 11போ்
முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
விவசாயியின் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்கள் சூறையாடல்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தாய் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்

November 30, 2024
48 Views
மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி
நாகர்கோவிலில் அரிவாள் கத்தியுடன் சுற்றி திரிந்தபாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினர் போக்சோவில் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account