மயிலாடுதுறை, செப். 19 –
மயிலாடுதுறையில் சாலை ஓரம் ஆதரவற்ற நிலையில் யாசகம் எடுத்து வாழ்ந்த மயிலாடுதுறை தீப்பாய்ந்தால் அம்மன் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் மாற்றுதிறனாளி மதிவாணன் என்பவரை மயிலை கருணைக் கரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் தஞ்சை மகாதேவன் அவருக்கு முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து பின்னர் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறை உதவியுடன் பெரம்பலூர் காப்பகத்தில் சேர்த்தனர்.
இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனர் தஞ்சை மகாதேவன் கூறுகையில்: கடந்த ஐந்து வருடங்களாக சாலை ஓரங்களில் ஆதரவற்ற முதியவர்களை அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பது, காப்பகத்தில் சேர்ப்பது, ஆதரவற்ற நிலையில் சாலை ஓரங்களில் யாசகம் எடுப்பவர்களுக்கு மதிய உணவு வழங்குவது, ஆதரவற்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது உள்ளிட்ட உதவிகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்து வருகிறோம் என்றார்.



