சங்கரன்கோவில், மார்ச் 5 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2026-27ன் கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் பருவக்குடி-கோவில்பட்டி-எட்டயபுரம்-விளாத்திகுளம்-வேம்பார் சாலை கி.மீ 9/6-16/4 கலிங்கப்பட்டி முதல் கீழ திருவேங்கடம் வரை இருவழி சாலையிலிருந்து நான்கு வழிசாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிபடுத்துதல், பெரிய, சிறிய பாலம் கட்டுதல், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்ட சாலை பணிகளை நெடுஞ்சாலை துறையின் கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டப் பொறியாளர் தங்கராஜ் முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டபொறியாளர் அறிவெழில், உட்கோட்ட உதவிப்பொறியாளர்கள் முத்துமணி, கலைக்கண்ணதாசன், குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை, திருவேங்கடம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உட்பட நெடுஞ்சாலை துறையின் அனைத்து பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அரசு ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



