கிருஷ்ணகிரி மாவட்டம் 23-9-24
கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30சதவீத விற்பனையை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு தொடங்கி வைத்தார் – நடப்பாண்டு 2.10 கோடி இலக்காக நிர்ணயிக்க பட்டுள்ளதாக தெரிவித்தார்
கிருஷ்ணகிரி செப்24 : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் மூன்று இடங்களில் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டு தீபாவளி 30 சதவீத விற்பனையினை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு இன்று கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தார். புதியதாக விற்பனைக்கு வரபெற்றுள்ள ஆடைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு அசல் ஜரிகையுடன் பட்டு புடவைகள், முக்கிய பகுதிகளில் தயாராகும் காட்டன் புடவைகள், ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், ஸ்கிரீன் துணிகள், உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான துணிகள் வைக்கபட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று விற்பனை நிலையங்களுக்கு 2 கோடியை 10 லட்சம் ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்க பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக 30 சதவீதம் வழங்க படுகிறது. மேலும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு சிறப்பு தள்ளுபடியாக வட்டியில்லா கடன் வசதியும் வழங்க படுகிறது என்று கூறினார்.