தென்காசி மாவட்டம் தென்காசி நகரின் மையப் பகுதியான யானை பாலம் சிக்னலில் வைத்து நீதியின் நுண்ணறிவுக் குழுமம் மற்றும் தென்காசி ரத்ததான கழக கூட்டமைப்பு இணைந்து மே 3 தேதி சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் மணி துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு நீதியின் நுண்ணறிவு ஆனந்த் தலைமை வகித்தார் நிகழ்ச்சியினை பூவையா, மஹேந்திரன் ஏற்பாடு செய்திருந்தனர் தென்காசி ரத்ததான கழக கூட்டமைப்பினுடைய நிர்வாகிகள் பூக்கடை சரவணன், கோபி, முகமது அன்வர் , கோபால் @செந்தில், அகில இந்திய காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் காசி பாண்டியன், வழக்கறிஞர் திருமலை குமார் , C.மாரிச்செல்வி மற்றும் பணி நிறைவு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நயினார் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.