இரணியல், ஜூலை 18 –
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த குதிரை பந்தி விளை என்ற இடத்தை சேர்ந்தவர் வர்க்கீஸ் (50). மரவேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இவருக்கு மதுப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது.
நேற்று மாலை அருகே உள்ள இரட்டை கரை கால்வாய்க்கு குளிக்க சென்றார் நீண்ட நேரம் ஆகி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் கால்வாய் சென்று பார்த்த போது மயங்கிய நிலையில் தண்ணீரில் மிதந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கம் உறவினர்கள் நண்பர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு வரும் வழியில் இறந்து விட்டார் என்று கூறினர். இது குறித்து புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



