வாசகர் வட்டம் சார்பில் மலரஞ்சலி – நினைவுரை
தக்கலை, செப்.11:
மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு நாளை முன்னிட்டு, பத்மநாபபுரம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வாசகர் வட்ட அமைப்பாளர் சிவனி சதீஷ், பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நூலக வாசகர்கள் பாரதியாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், பாரதியாரின் தேசப்பற்று, சமூக சீர்திருத்த சிந்தனைகள் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகள் குறித்து நினைவுரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், காவல்துறை அதிகாரி விஜயராணி, சமூக சேவகர் தக்கலை சந்திரன், கலையூர் காதர், டாக்டர் எஸ்.ஜெயாஸ்ரீதரன், வழக்கறிஞர் எமிலின் பெலிண்டா, வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமரேஷ், ஆசிரியர் ப.நடராஜன், கவிஞர் அரங்கசாமி, கவிஞர் ராஜசேகர், புதிய உலகம் டாக்டர் எஸ்.சதீஷ் கிருஷ்ணா, டாக்டர் பி.முருகேசன், வரலாற்று ஆய்வாளர் சாகுல் ஹமீது, சமூக சேவகி கிரிஜா மணி, சமூக சேவகர் குளச்சல் சபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஓவியர் ஜோசப் ராஜ், சாமுவேல், சந்தோஷ், லீமா ரோஸ், வசந்தா உள்ளிட்ட ஏராளமான வாசகர்கள் பங்கேற்று பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பலர் பாரதியாரின் வாழ்க்கை, படைப்புகள் மற்றும் சமூக சிந்தனைகள் குறித்து நினைவுரையாற்றினர்.
நிறைவாக பத்மநாபபுரம் கிளை நூலகர் ஷோபா நன்றி உரை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்டத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.



