களியக்காவிளை, பிப்ரவரி 28 –
கிரேஸ் கல்வி நிறுவனங்களில் சமூகநீதி நாள் கொண்டாடப்பட்டது. ஆங்கிலத் துறை தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார். கல்லூரி தாளாளர் கீதா பான்ஸ் குத்துவிளக்கேற்றினார். கல்லூரியின் தலைவர் டாக்டர். பான்ஸ் ஜாய் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கிரேஸ் கல்வி நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஜான் ஸ்டீவ் கலந்து கொண்டு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற கிரேஸ் கல்வியியல் கல்லூரி ஆங்கிலத்துறை மாணவ ஆசிரியை கிருஷ்ணா அவர்களுக்கு கல்லூரியின் தலைவர் பான்ஸ் ஜாய் பரிசு வழங்கி கௌரவித்தார். கல்லூரியின் பொது மேலாளர் மத்தியாஸ் நன்றி கூறினார். கல்லூரி நிர்வாகி தயாசிங் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்.



