கிருஷ்ணகிரி, அக். 02 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மற்றும் வேளாங்கண்ணி பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில் ஆயுத பூஜை தின சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் வேளாங்கண்ணி பள்ளி குழுமங்கள் மற்றும் அறக்கட்டளை நிறுவனரான மு.தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அது சமயம் பள்ளியில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பள்ளி வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஆயுத பூஜை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரிய பெருமக்கள், வாகன ஓட்டுனர்கள், பாதுகாவலர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பர்கூரில் அமைந்துள்ள அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கட்சி அலுவலகத்தில் பர்கூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தி அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு பொரி மற்றும் இனிப்புகளும் பரிசுகளும் அன்பளிப்பாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், இலக்கிய அணி மாவட்ட கழக செயலாளர் கார்த்திகேயன், வர்த்தக அணி செயலாளர் தூயமணி, அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் வெற்றிசெல்வம், அம்மா பேரவை மாவட்ட துணை தலைவர் செந்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.



