சிவகங்கை, 17, ஆகஸ்ட, 2026
இந்திய நாட்டின் 80 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 கொண்டாடப்பட்டது. இந்தசுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் விதமாக சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நல்லறவுக்கான கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் காரைக்குடியில் உள்ள காவலர் குடியிருப்பு மைதானத்தில் நடைபெற்றது.15,16 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளர் ஆசிஸ் புனியா, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் .S.சுப்பையா, மருங்கிபட்டி G ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசினை சிவகங்கை அரசு மன்னர் பள்ளியும், இரண்டாம் பரிசு ஆ. தெக்கூர் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை பள்ளியும், மூன்றாவது பரிசை செக்ககுடி & SDAT -B அணியினர் பகிர்ந்து கொண்டனர்.
நாற்பதுவயதிற்கு மேற்பட்டான கபடி போட்டியில் முதல் பரிசினை காரைக்குடி நண்பர்கள் அணியும் , இரண்டாம் பரிசினை திருச்சி அணியினரும், மூன்றாம் பரிசினை புதுக்கோட்டை ஏம்பல் அணியினரும், நான்காம் பரிசு மதுரை மாவட்டம் இடையபட்டி அணியினரும் பெற்றனர்
. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு தொகையுடன் பதக்கம் வழங்கப்பட்டது. காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான நல்லுறவை உருவாக்கும் தோக்கோடு நடைபெற்ற போட்டியினை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.


