சுசீந்திரம், பிப். 7 –
சுசீந்திரம் அருகே உள்ள சாஸ்தா நகர் பகுதியைச் சார்ந்தவர் லெட்சுமி (66). இவர் இவரது மகன் நாராயணன் என்பவருடன் தாமசித்து வருகின்றார். நேற்று தனது பேத்தியை பள்ளிக்கு செல்வதற்காக பள்ளி பேருந்து ஏற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பியவர் கால் இடறி சாஸ்தா கோவில் அருகே உள்ள தண்ணீர் ஓடையில் விழுந்து உள்ளார். இதில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது மகன் நாராயணன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


